×

பழநி கோயிலில் மகனுடன் ஓபிஎஸ் திடீர் தரிசனம்

பழநி, மே 23: இன்று வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ள நிலையில் பழநி கோயிலில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது மகனுடன் திடீர் தரிசனம் செய்தார். மக்களவை தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம், பழநி மலைக்கோயிலில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்ய நேற்று மாலை வந்திருந்தார். உடன் அவரது மகனும், தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான ரவீந்திரநாத் குமார், மற்றொரு மகனான பிரதீப் மற்றும் குடும்பத்தினர் வந்திருந்தனர்.

முருகன் ராஜ அலங்காரத்தில் காட்சியளிக்கும் சாய்ரட்சை பூஜையில் கலந்து கொண்ட ஓபிஎஸ் ெதாடர்ந்து தங்கரதம் இழுத்தும் வழிபாடும் செய்தார். இவருடன் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம், மாவட்ட ஆவின் பால் தலைவர் செல்லச்சாமி சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் ஓபிஎஸ், அவரது குடும்பத்தினர் மலைக்கோயிலில் இருந்து ரோப்கார் மூலம் இறங்கி சென்றனர். முன்னதாக பத்திரிகையாளர்கள் ஓபிஎஸ்சிடம் பேட்டி எடுக்க முற்பட்ட போது, ‘சாமி தரிசனம் செய்ய மட்டுமே வந்துள்ளேன்’ என கூறி சென்றார்.

Tags : darshan ,Pazhani Temple ,
× RELATED தர்ஷன், அஞ்சு குரியன் நடித்த எண்ட ஓமனே