×

அனுமந்தராயன்கோட்டையில் பூட்டியே கிடக்கிறது பாத்ரூம் திறந்தவெளி தொடர்வதால் நோய் பரவும் அபாயம்

செம்பட்டி, மே 23: அனுமந்தராயன்கோட்டையில் மகளிர் சுகாதார வளாகம் பூட்டியே கிடப்பதால் திறந்தவெளி கழிப்பிடம் தொடர்கதையாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்டது அனுமந்தராயன்கோட்டை. சுமார் 5000 பேர் வசிக்கின்றனர். இங்கு திறந்தவெளி கழிப்பிடத்தை ஒழிக்க தூய்மை இந்திய திட்டத்தின் கீழ் பொதுமைதானம் அருகே மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் முறையாக இதை பராமரித்த ஊராட்சி நிர்வாகம் பின் வழக்கம்போல் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டது. ஒரு கட்டத்தில் சுகாதார வளாகத்தை பூட்டியே விட்டனர்.

இதனால் அப்பகுதி பெண்கள் மீண்டும் இரவுநேரங்களில் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்பகுதி பெண்கள் கூறுகையில், ‘எதை ஒழிக்க சுகாதார வளாகத்தை திறந்தார்களோ அது கொஞ்சம் கூட நடக்கவில்லை. அனுமந்தராயன்கோட்டையில் தூய்மை இந்தியா திட்டம் முடங்கி திறந்தவெளி கழிப்பிடம் தொடர்கதையாக உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் பூட்டி கிடக்கும் சுகாதார வளாகத்தை உடனே பயன்பாட்டிற்கு கொண்டு வருவதுடன் முறையாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : bathroom ,
× RELATED ரூ.15 லட்சத்துக்கு தங்கம் இருக்கு: ரூ.10...