பட்டிவீரன்பட்டியில்

ஆட்டோவில் மணல் கடத்தியவர் கைது

பட்டிவீரன்பட்டி, மே 23: பட்டிவீரன்பட்டி இன்ஸ்பெக்டர் ராமலெட்சுமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த ஆட்டோவை மறித்து சோதனை செய்தனர்.

இதில் மருதாநதி ஆற்றில் இருந்து 30 சாக்குகளில் மணல்களை திருடி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் மரியாயிபட்டியை சேர்ந்த ஆனந்தன் (38) என்பது தெரிந்தது.

இதையடுத்து போலீசார் மணலை பறிமுதல் செய்து, ஆனந்தனை கைது செய்தனர்.

Related Stories: