கொடைக்கானல், மே 23: கொடைக்கானலில் சுற்றுலா வாகன நிறுத்துமிட சுற்றுச்சுவர் விரிசல் விழுந்து இடியும் நிலையில் உள்ளது. எனவே அசம்பாவிதம் நடக்கும் முன் சீரமைக்க வேண்டும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொடைக்கானலில் கோடை சீசனையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்குநாள் அதிகம் உள்ளது. தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். இதனால் சுற்றுலா பஸ்கள், வேன்கள், கார்கள் அதிகமான எண்ணிக்கையில் வருகின்றன. இவை கொடைக்கானல் கேஆர்ஆர் கலையரங்கம் பகுதியில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்படுகின்றன.