மணப்பாறை அருகே குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை மக்கள் முற்றுகை

மணப்பாறை,  மே 23:  மணப்பாறை அருகே குடிநீர் கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட  நடுப்பட்டி கிராமத்தில்  கடந்த  சில  நாட்களாக முறையான  குடிநீர்  வழங்கவில்லை. இதனால் இப்பகுதியினர் அவதிப்பட்டனர். அதிகாரிகளிடம்  வலியுறுத்தியும் எந்த பலனும் ஏற்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று காலை காலிக்குடங்களுடன்  ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தகவலறிந்து வந்த ஊராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் சமரச பேச்சுவார்த்தை  நடத்தி விரைவில் காவிரி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று  கூறியதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.

Related Stories: