×

சாரண சாரணியர் ஆசிரியைக்கு சான்றிதழ்

திருத்துறைப்பூண்டி, மே 23: நீலகிரி மாவட்டத்தில் சாரண சாரணியர் வழிகாட்டி தலைவிகளுக்கான பயிற்சி முகாமில் திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்த ஆசிரியைகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு நீலகிரி மாவட்டம்  குன்னூர் பாரத சாரண, சாரணியர் மாநில பயிற்சி மையத்தில் நடந்த முன்னோடி வழிகாட்டி தலைவிகளுக்கான ஏழு நாள் பயிற்சி முகாமில் திருத்துறைப்பூண்டி சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வழிகாட்டி தலைவிகள் ரேவதி, சுமித்திராதேவி, யாழினி, புனித தெரசாள் மெட்ரிக் பள்ளி ஆசிரியை கிருத்திகா ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.அவர்களுக்கான சான்றிதழை முகாம் தலைவர் சேலம்பியுலா ஆனந்த் வழங்கினார். முகாமில் கூடாரம் அமைத்தல், கயிற்றுக்கலை, திசை காட்டி பயன்படுத்துதல், முதலுதவி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.


Tags : Scouting Scout Editor ,
× RELATED தமிழ்பல்கலை கழகத்தில்...