×

அன்றும் இன்றும் கூத்தாநல்லூர் ஏ.ஆர். ரோட்டில் சாலையில் விபத்தை ஏற்படுத்தும் பள்ளம்

கூத்தாநல்லூர்,மே 23: கூத்தாநல்லூர் ஏ.ஆர்.ரோட்டில்  உள்ள பள்ளத்தை சரிசெய்து வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும் சிரமத்தை போக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.     திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் லெட்சுமாங்குடியை இணைக்கும் முக்கிய சாலையாக இருப்பது ஏ.ஆர்.ரோடு ஆகும்.இந்த சாலையில்தான் கூத்தாநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி அலுவலகம் போன்ற முக்கிய அலுவலகங்கள் மற்றும் தனியார் வங்கியும் அமைந்துள்ளன. கூத்தாநல்லூரில் இருந்து  திருவாரூர், மன்னார்குடி மற்றும் கொரடாச்சேரி செல்லும் வாகனங்களும் , வரும் வாகனங்களும் கூத்தாநல்லூர் போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்கும் வகையில் ஏ.ஆர். சாலையைத்தான் பயன்படுத்துகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரி செல்லும்  வாகனங்களும்,  ஆட்டோக்களும் இந்த சாலையில் அதிகம் சென்று வருகின்றன.

    இந்த சாலை பல இடங்களில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. அதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாவதுடன் சறுக்கி விழுந்து ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக ஏ.ஆர்.சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கி எதிரில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் உள்ள சாலையில் தான் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பள்ளங்கள் அதிகமாக உள்ளன.    எனவே வாகன ஓட்டிகளின் சிரமத்தை போக்கும் விதமாக அந்த பள்ளங்களை உடனடியாக சீர்செய்து தர வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : road ,crash ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி