கெங்கவல்லி, மே 23: வீரகனூர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலைய சுற்றுச்சுவரை மர்ம நபர்கள் இடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வீரகனூர் பேரூராட்சிக்குட்பட்ட 2வது வார்டு பகுதியில், பயன்பாடின்றி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதற்கு பதிலாக, ஆத்தூர் மெயின் ரோடு பேரூராட்சி அலுவலகம் அருகில், புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பயன்பாடின்றி இருக்கும் சுகாதார நிலைய கட்டிடத்தை, புதுப்பித்து துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என, வீரகனூர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மர்ம நபர்கள் சிலர், சுகாதார நிலையத்தின் சுற்றுச்சுவரை இடித்து விட்டனர். இது குறித்து மக்கள் கொடுத்த புகாரின் ேபரில், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வீரகனூர் பகுதி சுகாதார ஆய்வாளர் நேரில் வந்து பார்வையிட்டனர்.