மகளிர் சுய உதவி பொதுக்குழு கூட்டம்

தம்மம்பட்டி, மே 23:  தம்மம்பட்டியில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் கூட்டமைப்பான, கெங்கவல்லி வட்டார களஞ்சியத்தின் 14ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் வட்டார செயற்குழு தலைவி ராசாத்தி வரவேற்றார். கூட்டத்தில் கெங்கவல்லி வட்டார களஞ்சியம் தனித்து செயல்படுவது, தேசிய அளவிலான கூட்டமைப்பில் இணைவது, களஞ்சியங்கள் வங்கி கடன் கல்வி பெறுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் சுமார் 277 களஞ்சியங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் வட்டார செயற்குழு உறுப்பினர்கள் 200 பேர் கலந்து கொண்டனர். இதில், புதிய செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். வட்டார தலைவர் பாலாமணி நன்றி கூறினார்.

Related Stories: