கோவிந்தபுரம் கிராமத்தில் உயிர் காரணிகள் உற்பத்தி மையம் துவக்கம்

கும்பகோணம், மே 23: விவசாயிகள் அளவுக்கு அதிகமாக பூச்சி மருந்துகளை உபயோகிப்பதால் நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்து தீமை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது.  மேலும் மனிதா-்களுக்கு கேன்சா் நோய் மற்றும் இதர நோய் வருவதற்கு காரணமாக அமைகிறது. எனவே பூச்சி மருந்து உபயோகிப்பதை குறைக்க வலியுறுத்தப்படுகிறது. மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை பூச்சி மருந்து உபயோகத்தால் குறைவாக காணப்படுகிறது. அதனால் மண்வளம் குறைவதோடு மட்டுமல்லாமல் பயிர் பூச்சிநோய் தாக்குதலுக்கு உட்பட்டு மகசூல் குறைவாக காணப்படுகிறது. நுண்ணுயிர்களை மண்ணில் இடுவதால் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, மண்வளம் பாதுகாக்கப்படுகிறது. மேலும் விதை முளைப்புத்திறன், பயிரின் வளா்ச்சி அதிகரிப்பதோடு பூச்சிநோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கப்படுகிறது.ஒருங்கிணைந்த முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்த உயிரியல் காரணிகள் உற்பத்தி செய்வதற்கு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் உயிர் காரணிகள் உற்பத்தி மையமானது நீர்வள நிலவள மேம்பாட்ட திட்டத்தின்கீழ் துவங்கப்பட்டது.

இக்குழுவின் மூலம் டிரைக்கோடெர்மாவிரிடி மற்றும் டிரைக்கோக்ரம்மா கைலனிஸ் ஒட்டுண்ணி உற்பத்தி செய்வதற்கு பயிற்சி அளிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இக்குழுவுக்கு உயிர் காரணிகள் உற்பத்தி  செய்வதற்கு ரூ.70  ஆயிரத்தை அரசு மானியமாக வழங்கப்படுகிறது.இக்குழுவின் மூலம் உற்பத்தி செய்யப்படும் உயிர் காரணிகள் அரசு மற்றும் விவசாயிகளுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 600 கிலோ  டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் 200 கிலோ டிரைக்கோக்ரம்மா கைலனிஸ் ஒட்டுண்ணி உற்பத்தி மூலப்பொருட்கள் வழங்கப்பட்டு உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது. டிரைக்கோடெர்மா விரிடி விதை நோ்த்தி செய்வதால் பயிர்களில் பூஞ்சனை நோய்களை கட்டுப்படுத்த முடியும். டிரைக்கோக்ரம்மா கைலனிஸ் ஓட்டுண்ணி மூலம் நெல் குருத்துப்பூச்சி மற்றும் கரும்பு குருத்துப்பூச்சிகளை கட்டுப்படுத்த முடியும். எனவே ஒருங்கிணைந்த முறையில் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்துவதற்கு இக்குழுவின் மூலம் உயிர் காரணிகளின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் விவசாயிகளுக்கு திருவிடைமருதூர் வேளாண்மை உதவி இயக்குனர்  ரவிச்சந்திரன் தலைமை வகித்து பயிற்சி அளித்தார். வேளாண்மை அலுவலர் செல்வராணி, துணை வேளாண் அலுவலர் சாரதி  மற்றும் வேளாண் உதவி அலுவலர் பங்கேற்று பயிற்சி அளித்தனர்.

Related Stories: