பேருந்து டிரைவரை கல்லால் தாக்கிய வாலிபருக்கு வலைவீச்சு

திருக்காட்டுப்பள்ளி, மே 23: திருக்காட்டுப்பள்ளி அருகே அரசு பேருந்தை இயக்கி சென்ற டிரைவரை கல்லால் தாக்கியவரை போலீசார் தேடி வருகின்றனர். திருக்காட்டுப்பள்ளியில் இருந்து கல்லணைக்கு கடந்த 19ம் தேதி அரசு பேருந்தை பூதலூர் காங்கேயர் டவுன்சிப் பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் (38) இயக்கி சென்றார். செய்யாமங்கலம் பஸ்ஸ்டாப் அருகில் போதையில் இருந்த செய்யாமங்கலம் மெயின்ரோட்டை சேர்ந்த லட்சுமணன் மகன் சஞ்சீவி (29) என்பவர் கல்லை எடுத்து வீசினார். இதில் டிரைவர் சந்திரசேகரன் நெற்றில் கல் பட்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து தோகூர்  போலீசார் வழக்குப்பதிந்து சஞ்சீவியை

வலைவீசி தேடி வருகிறார்.

Related Stories: