இடைப்பாடி அருகே மாணவியை கடத்திய மாணவருக்கு வலை

இடைப்பாடி, மே 23:  இடைப்பாடி அருகே இளவம்பாளையம் பகுதியை சேர்ந்த 17வயது மாணவி, பி.மேட்டுபாைளையம் அரசு பள்ளியில் பிளஸ்2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 15ம் தேதி, மாணவியை காணவில்லை. இது குறித்து மாணவியின் பெற்றோர்கள், கொங்கணாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். அதில், அதே பள்ளியில் படித்து வந்த 18 வயதான மாணவர் தனது மகளை கடத்தி சென்றதாக கூறி இருந்தனர். இதையடுத்து, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த இருவரையும் தேடி வந்தனர். இதனிடையே, சேலத்தில் உறவினர்கள் வீட்டில் பதுங்கி இருந்த மாணவரை பிடிக்க போலீசார் சென்ற போது அவர் தப்பியோடி விட்டார். பின்னர், அங்கிருந்த மாணவியை மீட்டு, பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அந்த மாணவரை தேடி வருகின்றனர்.

Related Stories: