இடைப்பாடி புதன்சந்தையில் ₹24 லட்சத்திற்கு காய்கறி விற்பனை

இடைப்பாடி, மே 23: இடைப்பாடியில் புதன்கிழமை தோறும் சந்தை கூடுவது வழக்கம். நேற்று கூடிய சந்தையில் பல்வேறு மாவட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள், வியாபாரிகள் 89டன் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் தக்காளி 27 கிலோ பெட்டி ₹400 முதல் ₹800க்கும், பீன்ஸ் கிலோ ₹80க்கும், பீட்ரூட் கிலோ ₹35க்கும், கேரட் ₹50க்கும், உருளைகிழங்கு ₹20க்கும்,  முட்டைகோஸ் ₹23க்கும், இஞ்சி கிலோ ₹100 முதல் ₹140 வரையும் விற்பனை செய்யப்பட்டது. மாம்பழம் கிலோ ₹20 முதல் ₹50 வரை விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் மொத்தம் 89 டன் காய்கறி, ₹24 லட்சத்திற்கு விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: