மணல் திருட்டுக்கு பயன்படுத்திய லாரி பைக் பறிமுதல் 3 பேருக்கு வலைவீச்சு

தஞ்சை, மே 23: மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி மற்றும் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை தேடி வருகின்றனர். தஞ்சை சுங்கான்திடல் அருகே உள்ள வெண்ணாற்றங்கரையில் ஒரு லாரி மற்றும் பைக் நின்றது. இதில் 3 பேர் லாரியில் மணல் ஏற்றி கொண்டிருந்தனர். மேலும் பைக்கிலும் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும் அங்கு மணல் ஏற்றி கொண்டிருந்த 3 பேர் தப்பியோடிவிட்டனர். இதையடுத்து மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட லாரி மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிந்து மணல் கடத்திய 3 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories: