பேராவூரணி, மே 23: பேராவூரணி பகுதியில் கடும் வெயிலுக்கு இதமான, உடலுக்கு குளிர்ச்சியும், புத்துணர்வும் தரக்கூடிய வெள்ளரிப்பழம் விற்பனை அமோகமாக நடக்கிறது.பேராவூரணி ரயிலடியில் ஏராளமானோர் பேருந்துக்காக காத்திருந்து பயணிப்பது வழக்கம். இங்கு சாலையோரத்தில் பழக்கடைகள், பூக்கடைகள், காய்கறி கடைகள் உள்ளது. தற்போது கோடையின் தாக்கம் கடுமையாக உள்ளது. அக்னி நட்சத்திர காலமாக இருப்பதால் கடும் வெயில் காரணமாக, பொதுமக்கள் வெளியில் வர முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். பேராவூரணி பகுதியில் கஜா புயலால் ஆயிரக்கணக்கான நிழல் தரும் மரங்கள், பலன் தரும் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதனால் இந்தாண்டு வெப்பக்காற்று வீசுகிறது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் 104 டிகிரியை தாண்டி வெப்பநிலை உள்ளது. ஆறு, ஏரிகளும் வறட்சியின் காரணமாக காய்ந்து கிடக்கின்றன.