×

V

திருச்சுழி, மே 23: திருச்சுழி அருகே மனைவியை மண் வெட்டியால் வெட்டிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சுழி அருகே உள்ள நார்த்தம்பட்டியைச் சேர்ந்தவர் பானுமதி (23). இவருக்கும் ரவி என்பவருக்கும் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ரவியின் தாய், தந்தை உட்பட கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர். ரவிக்கும் மனைவி பானுமதிக்கும் ஏற்கனவே குடும்பத்தகராறு இருந்துள்ளது. ரவியின் சகோதர் செல்வம். செல்வத்தின் ஆசைக்கு இணங்க கோரி பானுமதியை பலமுறை வற்புறுத்தியாக கூறப்படுகிறது. இதற்கு பானுமதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ரவி மற்றும் செல்வமும் சேர்ந்து பானுமதியை கீழே தள்ளிவிட்டு மண்வெட்டியால் தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த பானுமதி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது சம்மந்தமாக பானுமதி கொடுத்த புகாரின் பேரில் ம.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : V ,
× RELATED வி.கே.புரம் அருகே வனவிலங்குகள்...