×

மயிலாடுதுறை மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு

நாகை, மே23: மயிலாடுதுறை மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று கலெக்டர் சரேஷ்குமார் கூறினார்.மயிலாடுதுறை மக்களவை தொகுதிக்கான வாக்கு  எண்ணிக்கை இன்று காலை 8.00 மணிக்கு மயிலாடுதுறை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட சீர்காழி. மயிலாடுதுறை, பூம்புகார், திருவிடைமருதூர், கும்பகோணம்,  பாபநாசம் ஆகிய 6 சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட மின்ணணு வாக்குகள் மற்றும் அஞ்சல் வாக்குகள் மயிலாடுதுறை ஏ.வி.சி. பொறியியல் கல்லூரியில் எண்ணப்படவுள்ளது.   ஒவ்வொரு தொகுதியிலும் மின்ணணு வாக்குகளை எண்ணுவதற்கு வசதியாக 14 மேஜைகளும், ஒவ்வொரு மேஜைகளுக்கு ஒரு கண்காணிப்பாளர், 1 உதவியாளார், 1 நுண்பார்வையாளார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மேஜைக்கும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் விவிபேட் இயந்தரங்களில் வாக்குகளிலிருந்து தலா 5 விவிபேட் இயந்தரங்களில் உள்ள பதிவுகளை எண்ணுவதற்கு ஏதுவாக தனியாக பகுதி ஒதுக்கப்பட்டு அதில் ஒரு கண்காணிப்பாளர், 2 உதவியாளர், 1 நுண்பார்வையாளர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளது. அஞ்சல் வாக்கு எண்ணுவதற்கு 4 மேஜைகள் போடப்பட்டு, ஒரு கண்காணிப்பாளர், 2 உதவியாளார், 1 நுண்பார்வையாளார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளது.
பணியாளர் வாக்குகளை etpbs மூலம் எண்ணப்படுகிறது. அதற்கும் ஒரு கண்காணிப்பாளார், 4 உதவியாளார், 1 நுண்பார்வையாளார் நியமனம் செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் கண்காணிப்பதற்கு வசதியாக வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்களுக்கு போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்றிலும் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை உதவி தேர்தல் அலுவலர் மூலம் suvidhaappல் பதிவேற்றம் செய்யப்படுகிறது. மேற்காணும் 6 சட்டமன்ற தொகுதிக்காக பதிவான வாக்குகளை ஒருங்கிணைத்து தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் அறிவிக்கப்படுகிறது. இதனை அனைவரும் பார்வையிட வசதியாக result.nic.in என்னும் இணையதளத்தில் பார்க்கலாம். மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏதும் ஏற்படாமல் 4அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கைகான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான சுரேஷ்குமார் கூறினார்.


Tags : Volume Voting Center ,Mayiladuthurai Lok Sabha ,
× RELATED அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு...