×

அடிக்கடி நடக்குது விபத்து இருவழிச்சாலை...ஒருவழிச்சாலை ஆகுமா?

காளையார்கோவில், மே 23: காளையார்கோவிலில் சாலை ஆக்கிரமிப்பு காரணமாக அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகின்றது. இதனை தடுக்க  இருவழிச்சாலையை  ஒருவழிச் சாலையாக மாற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர். காளையார்கோவிலில் உள்ள மதுரை தொண்டி நெடுஞ்சாலை 2012ம் ஆண்டு  தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு இருவழிச் சாலையாக உள்ளது. தற்போது காளையார்கோவில் பகுதியில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகமாகிக் கொண்டே போகிறது. இதனால் இருவழிச் சாலை ஒருவழிச் சாலைபோல் மாறிவருகின்றது. மேலும் காளையார்கோவில் பஸ் நிலையத்தில் இருந்து  கல்லல், காரைக்குடி திரும்பும் வளைவு மற்றும் போலீஸ் ஸ்டேசன், பரமக்குடிக்கு திரும்பும் வளைவுகளில்  அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுகின்றன.

எனவே விபத்துகளை தடுப்பதற்காக காளையார்கோவில் துணை மின்நிலையத்தில் இருந்து சூசையப்பர்பட்டிணம் விளக்கு வரையிலும் உள்ள இருவழிச் சாலையை ஒருவழிச் சாலையாக அமைக்க வேண்டும். போலீஸ் ஸ்டேசன், பரமக்குடி மற்றும் கல்லல், காரைக்குடிக்கு திரும்பும் வளைவுகளில் ரவுண்டானா அமைக்க வேண்டும். காலை மற்றும் இரவு நேரங்களில் டிராபிக் போலீசார் மூலம் வாகனங்களின் வேகங்களை கட்டுப்படுத்த  நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Occurrence Accident Two ,
× RELATED உலக புத்தக தின விழா