×

மருந்தாளுநர் சங்க பொதுக்குழு கூட்டம்

கிருஷ்ணகிரி, மே 23: கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன் முன்னிலை வகித்தார். இதில், புதிய மாவட்ட தலைவராக அன்புதுரை ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். செயலாளர் சதானந்தம் தீர்மானங்களை விளக்கி பேசினார். கூட்டத்தில், மக்கள் நலன் கருதியும், அரசின் நிதி விரயத்தை தவிர்க்க வேண்டியும், மிகவும் குறுகிய காலாவதி தேதி உள்ள தடுப்பு மருந்துகளை ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்குவதை தவிர்க்க வேண்டும். மருந்தியல் பணிக்கு தொடர்பில்லாத நோயாளர் நலச்சங்க பணியிலிருந்து மருந்தாளுநர்களை விடுவிக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குநர் மற்றும் துணை இயக்குநர்களை வலியுறுத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பெருமாள் நன்றி கூறினார்.

Tags : Pharmaceutical Society General ,Meeting ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...