×

கிருஷ்ணகிரியில் எஸ்டிபிஐ சார்பில் இப்தார் நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி, மே 23:  கிருஷ்ணகிரி பழையபேட்டையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில், தீவிரவாத எதிர்ப்பு தின கருத்தரங்கம் மற்றும் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் அஸ்கர்அலி தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் ஷபியுல்லா, பிஎப்ஐ மாவட்ட தலைவர் முகமத்கலீல் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக மாநில பொதுச் செயலாளர் உமர்பாரூக், மாநில துணைத் தலைவர் அம்ஜத்பாஷா, மாவட்ட அரசு காஜீ கலீல் அகமத், ஷாஹீ மஸ்ஜீத் முஸ்தாக் அகமத், அனைத்து கிறிஸ்தவர்கள் நலச்சங்க மாவட்ட செயலாளர் டேவிட்குமாரன், மஸ்ஜிதே அக்ஸா தலைவர் ஷாபுத்தீன், சிஎஸ்ஐ சர்ச் நிர்வாக செயலாளர் தனபால்துரைசிங், தமுமுக மாவட்ட தலைவர் நூர்முகமத், ஜமாஅத்தே, எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர்கள் தர்மபுரி ஜாவித், சேலம் அப்சர்அலி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். நகர துணை செயலாளர் ஜெயகுமார் நன்றி கூறினார்.  

Tags : Iftar show ,SDPI ,Krishnagiri ,
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்