×

மணல் கடத்திய டிரைவர் கைது

ஊத்தங்கரை, மே 23: ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார், கொண்டம்பட்டிபுதூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே டிராக்டர் ஒன்று மணல் ஏற்றி கொண்டு வந்தது. இதனை பார்த்த போலீசார் டிராக்டரை வழிமறித்து சோதனையிட்டனர். விசாரணையில், டிராக்டரில் மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, டிராக்டர் டிரைவர் மாதேஷை(25) போலீசார் கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED சூதாடிய 3 பேர் கைது