×

கரூர் கரூர் கரியாழிநகர் பகுதியில் குப்பைகளை எரிப்பதால் சுகாதார சீர்கேடு

கரூர், மே23:  கரூர் வாங்கல் செல்லும் சாலையில் இருந்து மின்னாம்பள்ளி செல்லும் சாலையோரம் கரியாழி நகர்ப்பகுதிகள் உள்ளன.நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் இந்த நகரைச் சுற்றிலும் உள்ளன. மேலும், இந்த சாலையின் வழியாக, மின்னாம்பள்ளி, நெரூர், ஒத்தக்கடை, சோமூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் அனைத்து தரப்பினர்களும் இந்த சாலையின் வழியாக சென்று வருகின்றனர்.இந்நிலையில், இந்த பகுதிகளை சுற்றிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் கரியாழி நகாப்பகுதியை ஒட்டியுள்ள சாலையோரம் எரிக்கப்படுகிறது. இதன் காரணமாக, வெளியேறும் புகையினால், சாலையின் வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பகுதியை ஒட்டி குடியிருந்து வரும் பொதுமக்களும் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். குப்பைகளை வாங்கல் சாலையில் உள்ள குப்பை கிடங்கில்தான் கொட்டப்பட வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக ஆங்காங்கே சேகரிக்கப்பட்டு எரிக்கப்படுவதால் குடியிருப்பு பகுதி வாசிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.எனவே, இந்த பகுதியில் குப்பை எரிப்பதை தவிர்க்கும் வகையில் தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : area ,Karur Karur Karyaninagar ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...