×

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை கோரி மக்கள் நீதி மைய நிர்வாகிகள் சார்பில் கவர்னருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்

கரூர், மே 23: கரூர் மாவட்ட மக்கள் நீதி மய்ய தொகுதி பொறுப்பாளர்கள் சார்பில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கவர்னருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.கரூர் தபால் தந்தி அலுவலகம் மக்கள் நீதி மய்ய அரவக்குறிச்சி வேட்பாளர் மோகன்ராஜ் தலைமையில், தொகுதி பொறுப்பாளர்கள்  உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.நிர்வாகிகள் சார்பில் கவர்னருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:கடந்த 13ம்தேதி அன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசனின் நாக்கை அறுப்பேன் என்ற ரீதியில் பேசியுள்ளார். தமிழக அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட அவர், உறுதிமொழிக்கு முரணான முறையில் பேசியுள்ளார். எனவே, வன்முறைகளை தூண்டும் வகையில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

Tags : Rajendra Palaji ,Governor ,Judicial Officers ,
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...