×

ஆபத்தான நிலையில் திறந்து கிடக்கும் வடிகால் பள்ளத்தால் வாகனஓட்டிகள் தடுமாற்றம்

கரூர், மே 23: ஆபத்தான நிலையில் திறந்து கிடக்கும் வடிகால் பள்ளத்தை சரிசெய்யவேண்டும்என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் கருப்பாயிகோயில் தெரு இறக்கத்தில் ஆபத்தான முறையில் வடிகால் பள்ளம் திறந்துகிடக்கிறது. இது சரிவான பகுதிஎன்பதால் வாகனங்கள் வேகமாகவரும் இடமாக உள்ளது.மேலும்பசுபதிபாளையம் மேம்பாலத்தில் இருந்து ஜவகர் பஜார், வஉசிதெரு, மேட்டுத்தெரு, போன்ற பகுதிகளுக்கு வரும் முக்கிய பாதையாக இருக்கிறது.

வடிகால் பள்ளம் திறந்த நிலையில் பல மாதங்களாக கிடக்கிறது.இரவுநேரத்தில் வரும் வாகன ஓட்டிகள் தடுமாறியபடி செல்கின்றனர். பள்ளிகள் திறக்கப்பட்டால் இந்த சாலையில் போக்குவரத்து அதிகமாக இருக்கும். அதற்கு முன்னதாக வடிகால் பள்ளத்தை சரிசெய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags :
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு