×

சுற்றுகள் சிவகாசி அருகே பிரபல திருடன் படுகொலை

திருமங்கலம் 23 சுற்றுகள், அருப்புக்கோட்டை 18 சிவகாசி, மே 23: சிவகாசி அருகே பிரபல திருடன் படுகொலை செய்யப்பட்ட நிலையில் செப்டிக் டேங்கில் பிணமாக கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிவகாசி அருகே சத்யா நகரைச் சேர்ந்தவர் பொட்டுக்கடலை (எ) ராஜ்குமார் மகன் செல்வகணேஷ் (23). இவர் மீது திருத்தங்கல் உட்பட பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் 17 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் திருத்தங்கல் எஸ்.ஆர்.என்.எம். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செப்டிக் டேங்கில் வெட்டுக் காயங்களுடன் செல்வகணேஷ் பிணமாக கிடந்தது நேற்று தெரிந்தது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருத்தங்கல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடம் வந்து செல்வகணேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்வகணேஷ், கத்தியால் குத்தப்பட்டும், கழுத்து நெரிக்கப்பட்டும் செப்டி டேங்கில் பிணமாக கிடந்தார். இவரை  மர்ம நபர்கள் கொலை செய்து உடலை வீசிச் சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. செல்வகணேஷ் இறந்து மூன்று நாட்கள் இருக்கும் என்றும் கொலையாளியை தேடி வருகிறோம் என்றும் போலீசார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : massacre ,Sivakasi ,
× RELATED தாய் கண் முன்னே இளைஞர் வெட்டிக்கொலை