×

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் படிக்க 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பம் அளிக்கலாம்: கலெக்டர் தகவல்

சென்னை: திருவான்மியூரில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி வகுப்புக்களுக்கு 10ம் வகுப்பு முடித்தவர்கள் மே 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவான்மியூரில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்பயிற்சி படிப்புகளுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் மே 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2 ஆண்டு எலக்ட்ரானிக் மெக்கானிக் பிரிவில் 48 இடங்கள் உள்ளது. அதேப்போல் 2 ஆண்டு எலக்ட்ரீசியன் பிரிவில் 20 இடங்களும், எலக்ட்ரானிக் மெடிக்கல் டெக்னீசியன்-எஸ்சிவிடி பிரிவில் 24 இடங்களும் உள்ளது. ஓராண்டு கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் அன்ட் புரோகிராமிங் அசிஸ்டென்ட் பிரிவில் 24 இடங்கள் உள்ளது. மேற்கண்ட 4 படிப்புகளுக்கும் 10ம் வகுப்பு கல்வித்தகுதி ஆகும்.


Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...