சென்னை: பழுதான குடிநீர் சுத்திகரிப்பு சாதனத்தை சரி செய்து தராத நிறுவனத்திற்கும், விற்பனை செய்த கடைக்கும் ₹25 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் ராஜபாண்டியன். இவர் மணலி சாலையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் குடிநீர் சுத்திகரிப்பு சதானம் ₹10 ஆயிரம் கொடுத்து வாங்கியுள்ளார். இந்த நிலையில் சாதனம் வாங்கிய சில நாட்களிலேயே பிரச்னை ஏற்பட்டு சுத்தமாக பழுதடைந்தது. பாண்டியன் இதுகுறித்து வாடிக்கையாளர் உதவி மையத்தில் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர். இதனால் பாண்டியன் சென்னையில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில், தான் வாங்கிய பொருளுக்கு வாரண்டி இருந்தும் சரி செய்து தராமல், தனது புகாரை குடிநீர் சுத்திகரிப்பு சாதன நிறுவனம் நிராகரித்து விட்டதாக கூறி புகாரளித்தார்.