தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

உளுந்தூர்பேட்டை, மே 23:உளுந்தூர்பேட்டை சிறப்பு நிலை பேரூராட்சி செந்தில்குமார் தலைமையில் நேற்று காய்கறி வார சந்தை உள்ளிட்ட கடை வீதியில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறதா என சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 30க்கும் மேற்பட்ட காய்கறி மற்றும் இதர கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து 250 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்த பேரூராட்சி பணியாளர்கள், அரசு எச்சரிக்கையை மீறி பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய கடையின் உரிமையாளர்களுக்கு ரூ.26,150 அபராதம் விதித்தனர். ஆய்வின் போது முதுநிலை உதவியாளர் தங்கவேல், மேற்பார்வையாளர்கள், பேரூராட்சி ஊழியர்கள் உடன் இருந்தனர்.

Related Stories: