×

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மக்கள் சந்திப்பு இயக்கம்

புவனகிரி, மே 23: பரங்கிப்பேட்டை அருகே உள்ள பு.முட்லூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு கலந்தாய்வு கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி, மாவட்ட செயலாளர் ஆறுமுகம். மாநிலக்குழு உறுப்பினர்கள் மாதவன், மூசா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் சதானந்தம், வாஞ்சிநாதன், ராஜா, மூர்த்தி, தண்டபாணி, ராஜேஷ்கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

கிராமசபை கூட்டங்களில் இந்த திட்டத்திற்கு எதிரான தீர்மானங்களை கொண்டு வர வேண்டும். பாதிக்கப்படும் மீனவ கிராமங்களிலிருந்து எதிர்ப்பு கடிதங்களை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவமாற்ற துறைக்கு அனுப்ப ஏற்பாடுகளை செய்வது. சிப்காட், சைமா சாயக்கழிவு, நாகார்ஜூனா நிறுவனம், அனல்மின் நிலையம், இறால் பண்ணைகள், வரவிருக்கும் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் போன்றவை பேராபத்தாகும் முன்பே இருக்கும் சூழலில் இந்த ஹைட்ரோ கார்பன் திட்டமும் வந்தால் நமது மாவட்டத்தின் விவசாயம், சுற்றுச்சூழல், மக்களின் வாழ்வாதாரம் போன்றவை எப்படி பாதிக்கும் என்பதை முழுமையாக மக்களுக்கு விளக்கும் வகையில் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை கேட்டு மக்கள் இயக்கங்களை நடத்துவது.வருகின்ற ஜூன் மாதம் 7 மற்றும் 8ம் தேதிகளில் இப்பகுதிகள் முழுவதும் 100 கிராமங்களில் பொதுமக்களை சந்திக்கும் வகையில் பிரசார இயக்கங்களை நடத்துவது, டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் இந்த திட்டத்திற்கு ஆதரவு அளிக்கக் கூடிய தமிழ்நாடு அரசு இனியாவது விழித்துக் கொண்டு மக்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய அரசை எதிர்த்து களம் காண வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை