×

கூழாங்கல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

திருவெண்ணெய்நல்லூர், மே 23:   திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏனாதிமங்கலம் கிராமத்தில் உள்ள தென்பெண்ணையாற்றில் 2 பேர் கூழாங்கற்கள் கடத்துவதாக திருவெண்ணெய்நல்லூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.  அங்கு 2 பேர் டிராக்டரில் கூழாங்கற்கள் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் பிடித்து விசாரணை செய்ததில், அதே ஊரைச் சேர்ந்த சிவா(56), நரசிங்கன் மகன் முருகன்(45) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிட
மிருந்து டிராக்டரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை