பயணிகள் நிழற்குடையை ஆக்கிரமித்துள்ள சமூக விரோதிகள்

திருக்கோவிலூர்,  மே 23: திருக்கோவிலூர் அடுத்த பழங்கூர் கிராமத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கு  முன்பு பொதுமக்களின் வசதிக்காக ஊராட்சி ஒன்றியம் சார்பில் நிழற்குடை  அமைக்கப்பட்டது. இதனை பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் பயன்படுத்தி  வந்தனர். இந்த நிலையில் அந்த நிழற்குடையை சமூக விரோதிகள் கடந்த சில  மாதங்களாக முற்றிலுமாக ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இதனால் அவ்வழியாக வரும்  பேருந்தில் இருந்து இறங்கி இளைப்பாறுவதற்கோ அல்லது பேருந்துக்காக காத்திருக்கவும் போதிய இடவசதி இல்லாமல் பயணிகள் கடும்  அவதிக்குள்ளாகி உள்ளனர். ஆகையால் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள்  உடனடியாக நடவடிக்கை எடுத்து சமூக விரோதிகள் பிடியில் இருந்து பயணிகள் நிழற்குடையை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு  வரவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: