×

சிறுமியை பலாத்காரம் செய்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது

சிதம்பரம், மே 23: சிதம்பரம் அருகே 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வரகூர்பேட்டை வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ரவி (60), விவசாய கூலி தொழிலாளி. இவர் சீர்காழி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி சிறுமியின் உறவினர் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி, சப்-இன்ஸ்பெக்டர் லூசி ஆகியோர் வழக்கு பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் ரவியை கைது செய்தனர். ஐந்து வயது சிறுமியை முதியவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது