×

தவறி விழுந்து ஜோதிடர் சாவு

சிதம்பரம், மே 23: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் சாத்துக்கூடல் மேல்பாதி பகுதியை சேர்ந்த வரதராஜன் (50). இவர் சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகையில் வாடகைக்கு அறை எடுத்து ஜோதிடம் பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இவர் குடிபோதையில் மாடிப்பறி ஏறியபோது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அவரது மனைவி தமிழ்ச்செல்வி அண்ணாமலை நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரங்கராஜன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED வில்லியனூரில் முதியவரை ஏமாற்றி தாமரை...