×

பைக் மாயம்

ரிஷிவந்தியம், மே 23: ரிஷிவந்தியம அடுத்த மேலபழங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாவு மகன் குருசாமி(42). இவர் சிறுபனையூர் தக்கா ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று அத்தியூர் சந்தை பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு அருகே உள்ள டீ கடையில் டீ குடித்துவிட்டு வந்து பார்க்கும்போது பைக்கை காணவில்லை.இது குறித்து பகண்டைகூட்ரோடு காவல் நிலையத்தில் குருசாமி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED `முதியோர் பென்சன் ₹8 ஆயிரம்...