×

மணல் கடத்திய மினிடெம்போ பறிமுதல்

திட்டக்குடி, மே 23:  ராமநத்தம் அருகே கீழ்கல்பூண்டி பகுதியில் உள்ள வெள்ளாற்றில் அனுமதியின்றி மணல் கடத்துவதாக வந்த தகவலின்பேரில் கிராம நிர்வாக அலுவலர் மாயவேல் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க ராமநத்தம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு வந்தனர். அப்போது அங்கு அனுமதியின்றி வெள்ளாற்றில் மணல் அள்ளிய சித்தூரை சேர்ந்த சுப்பிரமணியன் (40) என்பவர் போலீசாரை பார்த்தவுடன் மினி டெம்போவை அங்கேயே விட்டுவிட்டு தப்பிவிட்டார். இதையடுத்து போலீசார் மினி டெம்போவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Minedembo ,
× RELATED லாரி மோதி முன்னாள் திமுக நகர செயலாளர் பலி