திருச்செந்தூர் அருகே பனையில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

திருச்செந்தூர், மே 23:   திருச்செந்தூர் அருகே சீருடையார்புரம் பகுதியில் உள்ள குருநாதபுரம் தெற்குத் தெருவைச் சேர்ந்த மாயாண்டி மகன் செந்தூர் பாண்டி (44) பனை ஏறும் தொழிலாளி. இவரது மனைவி பட்டு செல்வி (42).  தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு மகள். மகளுக்கு திருமணமாகிவிட்டது. மகன்கள் இருவரும் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலைபார்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் செந்தூர்பாண்டி பனை ஏறுவதற்காக சென்றார். பனை ஏறும்போது எதிர்பாராதவிதமாக செந்தூர்பாண்டி தவறி கீழே விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த  மனைவி, அக்கம்பக்கத்தினர் துணையுடன் செந்தூர்பாண்டியை மீட்டு திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றார்.

அங்கு பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே செந்தூர்பாண்டி இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து திருச்செந்தூர் இன்ஸ்பெக்டர் முத்துராமன், எஸ்ஐ கனகராஜன் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: