சங்கரன்கோவில் அருகே பைக் விபத்தில் பேராசிரியர் பலி

சங்கரன்கோவில், மே 23:  சுரண்டை அருகே சிவகுருநாதபுரத்தை சேர்ந்தவர் சீனிவாசன் மகன்  ஆறுமுகச்சாமி (38). இவர், புளியங்குடி அடுத்த டி.என்.புதுக்குடியில் உள்ள மனோ கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். நேற்று மாலை நெல்லை நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். பனவடலிசத்திரத்தில் வரும்போது எதிர்பாராதவிதமாக ஆறுமுகச்சாமி ஓட்டிவந்த பைக், அரிச்சந்திரன் என்பவரது கடையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே ஆறுமுகச்சாமி இறந்தார். தகவலறிந்த பனவடலிசத்திரம் இன்ஸ்பெக்டர் ஷீலாராணி மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: