×

சங்கரன்கோவிலில் ஓய்வு பெற்ற போலீஸ்காரர் தற்கொலை

சங்கரன்கோவில். மே 23:  சங்கரன்கோவில் அருகே ஓய்வு பெற்ற போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சங்கரன்கோவில் அருகே உள்ள ராமலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராஜ் (60). போலீஸ் பட்டாலியனில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவரது இரண்டு மகன்களும் சென்னையில் வசிக்கின்றனர். ஜெயராஜின் மனைவி மகன்களுடன் தங்குவதற்காக சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஊரில் ஜெயராஜ் தனியாக இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் தனிமையில் இருந்த ஜெயராஜ் பூச்சி மருந்தை குடித்து மயங்கிய நிலையில் இருந்துள்ளார். அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்து பின் மேல்சிகிச்சைக்காக பாளை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சம்பவம் குறித்து கரிவலம்வந்தநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Sankarankovil ,suicide ,
× RELATED சங்கரன்கோவிலில் லோக் அதாலத் 127 வழக்குகளுக்கு தீர்வு