வி.கே.புரத்தில் கால்வாய் கரையில் உடைந்த தடுப்பு சுவரால் விபத்து அபாயம்

வி.கே.புரம், மே 23: வி.கே.புரம் மீனாட்சிபுரத்தில் கால்வாய் கரையில் உடைந்த தடுப்புச் சுவரை கட்ட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வி.கே.புரம் 3வது வார்க்கு உட்பட்ட மீனாட்சிபுரத்தில் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வடக்கு கோடை மேலழகியான் கால்வாய் செல்கிறது. கால்வாய் செல்லும் பகுதியிலுள்ள தடுப்புச் சுவர் பல இடங்களில் உடைந்து பல ஆண்டுகளாகியும் இன்னும் தடுப்பு சுவர் கட்டப்படாமல் உள்ளது. இரவு நேரங்களில் இப்பகுதியை கடந்து செல்பவர்கள் பயத்துடனே கடந்து செல்கின்றனர். இப்பகுதியில் போடப்பட்டுள்ள மின் விளக்குகளில் பல விளக்குகள் எரிவதேயில்லை. குடிநீரும் சீராக வருவதில்லை என இப்பகுதி மக்கள் தெரிவித்தனர். சம்பந்தபட்ட துறையினர் இக்குறைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: