எம்ஜிஆரின் நண்பர் பாவலர் அகமது ஷா காலமானார்

கடையம், மே 22: கடையம் அருகே ரவணசமுத்திரம் நெடுந்தெருவைச் சேர்ந்தவர் அகமது ஷா (87). அரசியல் மற்றும் ஆன்மீக பேச்சாளராக திகழ்ந்து வந்தார். முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நண்பரான இவரது துடிப்பான பேச்சுகள் தமிழர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றவை. கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் ரவணசமுத்திரத்தில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்த அவர் நேற்று காலை காலமானார். இன்று காலை ரவணசமுத்திரம் மஸ்ஜிதுல் அக்பர் ஷாபி பள்ளிவாசல் வளாகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

Related Stories: