திருப்பூர், மே 22: திருப்பூரில் திருமணமாகாத விரக்தியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனையை அடுத்த உறையூர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (30). இவர், திருப்பூர் வீரபாண்டி அடுத்துள்ள கொத்துக்காடு பகுதியில் உள்ள டையிங் நிறுவனத்தில் தங்கி பணியாற்றி வந்தார். அவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் 30 வயதான விக்னேஷ்க்கு குடும்பத்தினர் பல இடங்களில் பெண் பார்த்தும் திருமணம் முடிவாகவில்லை. இதனால் மனமுடைந்த விக்னேஷ் நேற்று முன்தினம் தான் தங்கியிருந்த அறையில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.