பெரியார் நகரில் இன்று மின்தடை

காங்கயம், மே 22: காங்கயம் கோட்டம் பெரியார் நகர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் இன்று (22ம் தேதி) காலை 9  முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது. பெரியார் நகர், தீத்தாம்பாளையம், எல்.கே.சி. நகர், எஸ்.ஆர்.ஜி வலசு ரோடு, ஏ.பி.புதூர்,  கரட்டுப்பாளையம், நாச்சிபாளையம், சு.க.வலசு, செந்தலையாம்பாளையம், தங்கமேடு மற்றும் நாகமநாயக்கன்பட்டி.

Related Stories: