×

கொடுஞ்செயல் எதிர்ப்பு அதிகாரிகள் உறுதி மொழி ஏற்பு

ஊட்டி, மே 22: ஊட்டியில் தமிழக கவர்னர் பன்வாரிலால் தலைமையில் அரசு அதிகாரிகள் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர். ஆண்டு தோறும் மே 21ம் தேதி ராஜிவ்காந்தி இறந்த நாளை முன்னிட்டு கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் நாடு முழுவதும் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்கப்படுகிறது.  

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஊட்டியில் முகாமிட்டுள்ள நிலையில், நேற்று ஊட்டி ராஜ்பவன் மாளிகையில், கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், கவர்னர் தலைமையில் நடந்த இந்த உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, எஸ்பி., சண்முகப்பிரியா, ராஜ்பவன் மாளிகை அதிகாரிகள், ஊழியர்கள், பிறத்துறை ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags : Citizen Anti-Officials ,
× RELATED தடுப்பு சுவரில் வாகனம் மோதி தொழிலாளி பலி