×

2 பேர் விஷம் குடித்து தற்கொலை

ஈரோடு, மே 22:  ஈரோடு நசியனூர் ராயபாளையம் பகுதியை சேர்ந்தவர் தெய்வசிகாமணி(60). விவசாயி. இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அதன்பின் வாழ்க்கையில் வெறுப்படைந்தார். இதனால் கடந்த 19ம் தேதி இரவு தெய்வசிகாமணி கதிரம்பட்டியில் உள்ள அவரது தோட்டத்தில் விஷம் மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் தெய்வசிகாமணியை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

 சத்தியமங்கலம் இக்கரை தத்தப்பள்ளி பழையூர் பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் மகன் மவுலிசங்கர்(29). விவசாயி. இவர் ஏதோ மனவேதனை காரணமாக கடந்த 18ம் தேதி வீட்டில் களைக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயன்றார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் மவுலிசங்கரை மீட்டு சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிக்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

Tags : suicide ,
× RELATED இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை