×

கேரளாவுக்கு பைக்கில் கஞ்சா கடத்திய 4 பேர் கைது

பாலக்காடு, மே 22: பாலக்காடு அருகே பைக்கில் கஞ்சா கடத்திய 4 வாலிபர்களை போலீசார் கைது ெசய்தனர். பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு அருகே இலஞ்சிமந்தம் பகுதியில் கொல்லங்கோடு கலால் துறை இன்ஸ்பெக்டர் பாலகோபாலன் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலியை அடுத்த கொல்லம்பரம்பைச் சேர்ந்த கண்ணன் (25), பல்லாரியைச் சேர்ந்த ஆல்பின் (22) ஆகியோர் பைக்கில் தமிழகத்தில் இருந்து கேரளா நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது அதிகாரிகள் பைக்கை நிறுத்தி சோதனை செய்தபோது 2 கிலோ கஞ்சா இருப்பது ெதரியவந்தது. இதையடுத்து  கஞ்சா, பைக்கை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

அதேபோல், மற்றொரு பைக்கில் தமிழகத்தில் இருந்து கேரளா நோக்கி வந்த வடக்கஞ்சேரியை சேரந்த அரவிந்த் (22), சேலக்கரையைச் சேர்ந்த நீரஜ் (22) ஆகியோரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது 300 கிராம் கஞ்சா இருப்பது ெதரியவந்தது. இதையடுத்து  இருவரும் கைது செய்யப்பட்டனர். கஞ்சா, பைக்கையும் பறிமுதல் செய்தனர்.

Tags : Kanchi ,
× RELATED கருடன் கருணை