காமராஜ் நகரில் கழிவுநீர் கால்வாய் அமைக்க கோரிக்கை

வால்பாறை, மே 22:  வால்பாறை பொள்ளாச்சி சாலையில், வால்பாறை டவுன் காமராஜ் நகர் பகுதியில் மழைக்காலங்களில் சாலையில் ஓடும் மழைநீரை கட்டுப்படுத்த சிறு பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கூடுதல் கால்வாய் பாலங்களை நெடுஞ்சாலைத்துறை அமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காமராஜ் நகர் மேல் பகுதியில் துளசிங்கநகர், பி.ஏ.பி காலனி உள்ளிட்ட குடியிருப்புகள் உள்ளது. தற்போது துளசிங்க நகர் பகுதியில் தங்கும் விடுதிகள் அதிகளவு உள்ளதால், கழிவு நீர் கால்வாய்கள் பொள்ளாச்சி வால்பாறை சலையில் ஓடுகிறது. மேலும் மழை காலங்களில் அதிக நீர் வரத்து உள்ளதால் சாலையை கடந்து நீர் ஓடுகிறது. எனவே அதிகாரிகள் மீண்டும் ஆய்வு செய்து சிறு பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: