×

வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பரிதாப பலி

கோவை, மே 22: கோவை அடுத்த காரமடை அருகே பெட்டதாபுரம்புதூரை சேர்ந்தவர் கதிரேசன். மனைவி மகேஷ்வரி (50). இவர், நேற்று முன்தினம் பெரியநாயக்கன்பாளையம் தண்ணீர் பந்தல் அருகே ரோட்டை கடந்த போது அந்த வழியாக வந்த கார் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட மகேஷ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்து வந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோவை அடுத்த அன்னூர் அருகே உள்ள குமாரகவுண்டன் புதூரை சேர்ந்தவர் லோகநாதன் (69). விவசாயி.

இவர், சம்பவத்தன்று பைக்கில் கருமத்தம்பட்டி-அன்னூர் ரோடு வளையபாளையம் பிரிவில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பைக்கில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் லோகநாதன் இறந்தார்.

Tags : victims ,accidents ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் மயங்கி விழுந்து 2 பேர் பலி: சேலத்தில் சோகம்