வீரபாண்டி செழியன் நினைவுநாள் ஊர்வலம்

சேலம், மே 22: வீரபாண்டி செழியனின் 18வது நினைவுநாள் ஊர்வலம், சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா தலைமையில் நேற்று நடந்தது. மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனும், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவருமான வீரபாண்டி நெடுஞ்செழியனின் 18வது நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி பூலாவரியில் நினைவு ஊர்வலம் நடந்தது. கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா தலைமையில், நடந்த ஊர்வலத்தில் திரளானோர் கலந்து கொண்டனர். பின்னர், பூலாவரியில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதேபோல், செழியனின் மனைவி பிருந்தா செழியன் மற்றும் மகேஸ்வரி காசி, நிர்மலா மதிவாணன், சாந்தி ராஜேந்திரன், பிரபு, கவுதமி பிரபு, கயல்விழி முத்துசங்கர், சூர்யா, டாக்டர் தருண், சிந்து ராம்குமார், மலர்விழி செந்தில் ஆனந்த, கிருத்திகா ெஜயரத்னா, பாரிவேல், தேன்மொழி, கோசுடர், சித்தார்த், ஆதவன், வீரசிவா, இலக்கியா, தேஜெஸ்குமார், சர்வேஷ், சபரீஸ் ஆகியோரும் செழியன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதில், மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், அவைத்தலைவர் கோபால், துணை செயலாளர் சுந்தரம், முன்னாள் எம்எல்ஏக்கள் தமிழ்செல்வன், சின்னதுரை, முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி, ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ்குமார், வெண்ணிலாசேகர், மாணிக்கம் மற்றும் நிர்வாகிகள் அயோத்தியாபட்டணம் சங்கர், கோபால், போடி காமராஜ், ஏஏ ஆறுமுகம், பாரப்பட்டி குமார், அழகாபுரம் முரளி, தெய்வலிங்கம், முருகபிரகாஷ், சந்திரமோகன், சங்கர், கார்த்தி உள்பட ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: