இளம்பிள்ளை அருகே மந்த கதியில் சாக்கடை பணி

இளம்பிள்ளை, மே 22: இளம்பிள்ளை அருகே எம்என்டி தெருவில் சாக்கடை கால்வாய் பணி கிடப்பில் போடப்பட்டதால் மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இளம்பிள்ளையை அடுத்த இடங்கணசாலை பேரூராட்சிக்குட்பட்ட 10வது வார்டு எம்என்டி தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இளம்பிள்ளை- சித்தர்கோயில் செல்லும் மெயின் ரோட்டில் இருந்து எம்என்டி தெருவில் சாக்கடை அமைக்க, கடந்த 6 மாதத்திற்கு முன்பு பணி தொடங்கியது. ஆனால், பணியை முழுமையாக முடிக்காமல் விட்டு விட்டனர். இதனால், அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் மக்கள் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்காமல், மெத்தன போக்கு காட்டி வருகின்றனர். இதனால், அப்பகுதி மக்கள் சாலையை கடந்து செல்ல முடியாமல் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, சாக்கடை கால்வாய் பணியை விரைவில் முடிக்க ேவண்டும் என மக்கள் ேவண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: