 நரசிம்ம சதுர்தசி விழா

சேலம், மே 22: சேலம் கருப்பூரில் உள்ள இஸ்கான் கோயில் வளாத்தில் நரசிம்ம சதுர்தசி விழா கொண்டாடப்பட்டது. சேலம், கருப்பூரில் உள்ள இஸ்கான் கோயில் வளாகத்தில், கடந்த 18ம் தேதி,  நரசிம்மரின் அவதார தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு பஜனை, அபிஷேகம்,  நரசிம்மர் உபன்யாசம் நாடகம் முதலானவற்றை கண்டும், கேட்டும் ரசித்தனர். அதனைத்தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Related Stories: